09 September 2009 | By: G.Sheik Mansoor.

1 + 0 = 10.............

ஒரு நாள் சுழியம் சோகமாக இருந்தது,
தனக்கு எந்த மதிப்பும் இல்லை என்று.
ஒன்றுக்கோ பூஜியத்தின் மேல் கொள்ளை ப்ரியம்.
ஒன்று பூஜியத்தின் அருகில் சென்றது
ஒன்றும் பூஜியமும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டது.
ஒன்றின் மதிப்பு பத்து மடங்கு ஆனது.
ஒன்றின் ஆசையோ குறையவில்லை
தன் மதிப்பை நூறாக்கிக் கொண்டது.
இன்றாவது அடங்கியதா ஒன்றின் ஆசை
இல்லவே இல்லை, அது வெறும் ஆசையல்ல பேராசை
பிறகென்ன ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி, கோடான கோடி...
அது ஒரு எல்லை அற்ற வளர்ச்சி.
ஒன்றின் மதிப்பு தொட்டதோ உச்சம்
ஒரே ஒரு சந்தேகம் தான் நமக்கு மிச்சம்
இது எண்ணிக்கையின் வளர்ச்சியா?
இல்லை எண்ணங்களின் வீழ்ச்சியா?

0 comments:

Post a Comment